திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் தலைமை தபால் நிலையம் முற்றுகை.!!

திருச்சி மக்கள் அதிகாரம் அமைப்பினர் பாஜக-வை ஆட்சியிலிருந்து அகற்றுவோம் என்பதை வலியுறுத்தியும் பாஜகவின் தோ்தல் விரோத நடவடிக்கைகளை தடுக்காத தோ்தல் ஆணையத்தை கண்டித்தும் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு அமைப்பின் மாநிலப் பொதுச் செயலா் சி. ராஜு தலைமை வகித்தாா் மாநிலப் பொருளாளா் காளியப்பன் கண்டன உரையாற்றினாா்
மக்கள் கலை இலக்கிய கழக மாநிலப் பொதுச் செயலா் கோவன் புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி தலைவா் இல. பழனி விவசாயிகள் விடுதலை முன்னணி மாநிலப் பொருளாளா் சேகா் புரட்சிகர மாணவா் இளைஞா் முன்னணி மாநிலப் பொதுச் செயலா் அன்பு ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைக் கழக பேச்சாளா் ரபீக் அகில இந்திய இளைஞா் பெருமன்ற மாநிலப் பொருளாளா் ரஹீம் தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ம.ப. சின்னதுரை ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்
முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸாா் கைது செய்து பீமநகா் பகுதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் அடைத்து, மாலையில் விடுவித்தனா். இது பீமநகர் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.