திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் நரிக்குறவர்கள் குடிசை மாற்று வாரியத்தில் வீடு வேண்டி மனு..!

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பிச்சாண்டார் கோவில் தெருவில் வசிக்கும் நரிக்குறவ இன மக்கள் 40 பேர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள் இவர்கள் வீடு கட்டிக் கொள்ள அரசு பட்டா வழங்கியிருக்கிறது. எத்தனையோ முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் இதுவரை வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படவில்லை . இன்று நடந்த மாவட்ட ஆட்சியர் மக்கள் குறை தீர்க்கும் முகாமில் நாங்கள் 40 குடும்பங்களும் குடிசை மாற்று வாரியத்தில் வீடு கட்டிக் கொடுக்குமாறு மனு கொடுத்து இருக்கிறோம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் எங்களுக்கு விரைவில் குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கி தருமாறு நரிக்குறவர் இன மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்..