கோவில் மைதானத்தில் சீட்டாட்டம் – 6 பேர் கைது..!

கோவை மாவட்டம் , அன்னூர் பக்கம் உள்ள ஒட்டர் பாளையத்தில் அருள்மிகு பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் மைதானத்தில் சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக அன்னூர் போலீசுக்கு தகவல் வந்தது . சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக ஒட்டர்பாளையத்தைச் சேர்ந்த ராகுல் ( 25 ) தமிழழகன் (34) கிரி ( 22 )திலிப் (22) வசந்த் ( 25)சந்தோஷ் (22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட பணம், சீட்டு பறிமுதல் செய்யப்பட்டது..