கோவில் அருகே பணம் வைத்து சீட்டாட்டம் – 8 பேர் கைது..!

கோவைசிங்காநல்லூர் நீலிக் கோணாம் பாளையத்தில் நீலியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவில் அருகே சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக சிங்காநல்லூர் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது .சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம் அங்கு திடீர் சோதனை நடத்தினார் அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக சிங்காநல்லூர் மார்க்கெட் ரோட்டை சேர்ந்த அரவிந்தன் ( வயது 31)வரதராஜபுரம் சதீஷ்குமார் (வயது 50) எஸ் .ஐ .எச். எஸ். காலனி கவின் ( வயது39) மசக்காரி பாளையம் சக்திவேல் ( வயது 30) என்.ஜி.ஆர் காலனி நாகமணி ( வயது28) பெருமாள் கோவில் வீதி ராஜேஷ் குமார் (வயது 35) வரதராஜபுரம் குமாரசாமி (வயது 30) சவுரிபாளையம் மோகன்ராஜ் (வயது 42) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட ரூ 1 4 ஆயிரத்து 820 பறிமுதல் செய்யப்பட்டது மேலும் விசாரணை நடந்து வருகிறது.