பிளஸ் 1 மாணவி தூக்கு போட்டு தற்கொலை..

கோவை பீளமேடு, சின்னியம்பாளையம் | கொண்டத்து காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் அண்ணாமலை .இவரது மகள் சுகன்யா ( வயது 16) சின்னியம்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வந்தார். இவர் ஒற்றை தலை வலியால் அவதிப்பட்டு வந்தாராம் .இதனால் மனம் உடைந்து நேற்ற அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையை விட்டத்தில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை அண்ணாமலை பீளமேடு போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.