ஒரே நாளில் சாலை விபத்தில் 2 பேர் சாவு…

கோவை மாவட்டம் எஸ். எஸ். குளம் பக்கம் உள்ள அருகம்பாளையம், இந்திரா நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் ( வயது 38) இவர் நேற்று பைக்கில் கோவில்பாளையம் கரூவலூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு வாகனம் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது .இதில் படுகாயம் அடைந்த கோவிந்தராஜ் அதே இடத்தில் இறந்தார். இது குறித்து அவரது மனைவி சித்ரா அன்னூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மாயமான வாகனத்தை தேடி வருகிறார்கள். இதேபோல கோவை பேரூர் பக்கம் உள்ள பச்சாபாளையம், கிருஷ்ணா காலனி சேர்ந்தவர் ஞானதுரை, ( வயது 56) இவர் நேற்று மாதம் பட்டியில் உள்ள
ஒரு பெட்ரோல் பங்க் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு வாகனம் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது .இதில் ஞானத்துரை படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சை கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து அவரது மகன் ஜெபராஜ் பேரூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு மாயமான வாகனத்தை தேடி வருகிறார்.