பல்லடம் செய்தியாளர் கொலை முயற்சி வழக்கில் போலீஸ் ஏட்டு கைது.!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் நேச பிரபு. இவர் தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரை கூலிப்படையைச் சேர்ந்த சிலர் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றனர். இதில் நேசபிரபு படுகாயம் அடைந்தார். இவர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பல்லடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து இது தொடர்பாக 12 பேரை ஏற்கனவே கைது செய்துள்ளனர். இந்த நிலையில் இதற்கு உடந்தையாக செயல்பட்டதாக பல்லடம் சிறப்பு பிரிவு போலீஸ் ஏட்டு சுபின் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். தனிப்படை போலீசார் இவரை கைது செய்தனர். இவரிடம் விசாரணை நடந்து வருகிறது.