கோவை சிறுவர் சிறுமியர் மன்றத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் காவல்துறை தலைவர் ஐபிஎஸ் குழந்தைகளுக்கு பரிசு வழங்கினார்.!

கோவை புலியகுளம் பகுதியில் உள்ள சிறுவர் சிறுமியர் மன்றம் பாரம்பரியமிக்க ஒன்றாக திகழ்கிறது. 1963 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த போது காமராஜர் இந்த புலியகுளம் BOYS AND GIRLS CLUB ஐ திறந்து வைத்தார். இங்கு இங்கு கல்வி கற்ற பல்வேறு குழந்தைகளும் பல்வேறு துறைகளில் சாதித்து அரசு பணிகளிலும் வெளிநாடுகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இங்கு வருகை புரிந்த தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் தலைவர் ராஜேஸ்வரி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடி அவர்களது கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களையும் கோப்பைகளையும் பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டி அவர்களுடன் கலந்துரையாடினார்.