குன்னூர் மவுண்ட் பிளசென்ட் சமுதாயக் கூடத்தில் காவல்துறை,பொதுமக்கள் கலந்தாய்வுக் கூட்டம்..!

நீலகிரி மாவட்டம் குன்னூர் உட்கோட்டம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி மவுண்ட் பிளசென்ட் சமுதாய கூடத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாம் இந்த முகாமில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பொது மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைகளையும் கேட்டறிந்து பொது மக்களுக்கு சமூக வலைதள குற்றங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்கள், பள்ளிக் கல்வி இடை நிற்றலால் ஏற்படும் தீமைகள் குறித்து மவுண்ட் பிளசன்ட் மற்றும் ஓட்டு பட்டறை பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது. நடைபெற்ற முகாமில் கலந்து கொண்ட நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மக்களின் பிரச்சினைகளுக்கு ஆலோசனைகள் வழங்கி பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்ற அறிவுரை வழங்கினார். நடைபெற்ற முகாமில் அப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஆண்கள் பெண்கள் என பலர் கலந்து கொண்டனர்..