வீடு புகுந்து மனைவியை கடித்து குதறிய கணவனுக்கு போலீசார் வலைவீச்சு..!

கோவை குனியமுத்தூர் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் குத்புதீன். இவரது மகள் சம்னா ( வயது 19) பிளஸ் 2 படித்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சல்மான் பாரிஸ் என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. அவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது . இதனால் சம்னா அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் கணவர் சல்மான் பாரிஸ் நேற்று மனைவியின் வீட்டுக்கு சென்று அவரிடம் தகராறு செய்தார். பின்னர் மனைவி சம்னாவை உடலில் பல இடங்களில் கடித்து காயப்படுத்தினார். பிறகு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் விசாரணை நடத்தி, சல்மான் பாரிஸ் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல், உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்..