வட மாநில தொழிலாளி மின்சாரம் தாக்கி சாவு…

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் அபுர்பா பிஸ்வால் (வயது 22) கூலிதொழிலாளி. இவர் கோவையில் தங்கி இருந்து ராமநாதபுரத்தில் நடந்து வரும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணியில் ஒப்பந்த தொழிலாளியாகவேலை செய்து வந்தார். நேற்று ஒலம்பஸ் அருகே சிமெண்ட் கலவை செய்யும் இயந்திரத்தின் மீது நின்று கொண்டு வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் மீது அவரது கை பட்டது. மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதை பார்த்த சக ஊழியர்கள் அவரை சிகிச்சைக்காக கோவை அரசுமருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் உரிய பாதுகாப்பு இல்லாமல் ஊழியர்களை பணி அமர்த்தி உயிரிழப்பு ஏற்படுத்திய ஒப்பந்ததாரரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்..