திருவள்ளூரில் நாளை மின்சாரம் நிறுத்தம்..!

திருவள்ளூர் : மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் நாளை சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 21.9.2024 மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மின் வாரிய சேர்மன் ராஜேஷ் லக்கானி ஆகியோர் இணைந்து தமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள பாமர மக்களும் நடுத்தர மக்களும் தடையில்லாமல் மின்சாரம் பெற்றிடவும் குறுகிய விவசாயிகள் தொழிற்சாலைகள் வர்த்தக நிறுவனங்களும் மின்தடை இன்றி வர்த்தகத்தை பெருக்கிக் கொள்ள மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளை செய்திட்டு மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திட உத்தரவு பிறப்பித்து இருந்தனர். அதன் பேரில் காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட தலைமை பொறியாளர் சந்திரசேகர் மேற்பார்வையில் திருவள்ளூர் காக்களூர் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காக்களூர் ஹவுசிங் போர்டு காக்களூர் தொழிற்பேட்டை காக்களூர் மற்றும் சி சி சி பின்புறம் பூண்டி புள்ளரம்பாக்கம் செவ்வாபேட்டை ஒதப்பை பிஞ்சிவாக்கம் தண்ணீர் குளம் என் ஜி ஓ நகர் ஈக்காடு ஒ திக்காடு தலக்காஞ்சேரி திருவள்ளூர் நகரத்தில் உள்ள ஜே என் சாலை பெரும்பாக்கம் ஐ சி எம் ஆர் பின்புறம் எம் ஜி ம் நகர் கொண்டமாபுரம் சத்தியமூர்த்தி தெரு சிவி நாயுடு சாலை ஜவகர் நகர் எடப்பாளையம் நேதாஜி சாலை வி எம் நகர் ஜெயா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை காக்களூர் உதவி பொறியாளர் கே. ரமேஷ் திருவள்ளூர் நகர உதவி பொறியாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் செய்து வருகின்றனர்..