தற்காலிக கூடாரம், போர்வை, குடிநீர், சூரிய ஒளி மின் விளக்கு, மருத்துகள், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மியான்மருக்கு இந்தியா அனுப்பி உள்ளது. முன்னதாக 2025 மார்ச் 28ஆம் தேதி மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து கவலை தெரிவித்த மோடி, 2025 மார்ச் 29ஆம் தேதி இன்று நிவாரண பொருட்களை அனுப்பி இருக்கிறார்.2025 மார்ச் 28ஆம் தேதி மியான்மர் மற்றும் தாய்லாந்தில் பயங்கரமாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த உலக நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மியான்மர் மற்றும் தாய்லாந்த தலைநகர் பாங்காங்கில் பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. மியார்மரில் 7.7 ரிக்டர் அளவுகோலிலும், பாங்காங்கில் 6.7 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. வரலாற்றிலேயே இல்லாத வகையில் மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், சுற்றுலாவுக்கு பெயர்ப்போன தாய்லாந்தில் நிலநடுக்கம் உலுக்கி எடுத்தது. நிலநடுக்கத்தால் இரு நாடுகளுக்கு நிலைகுலைந்துள்ளது. தாய்லாந்து மற்றும் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரிய பெரிய கட்டிடங்கள் சரிந்து விழுந்துள்ளன. மேலும், மியான்மரின் மண்டலேயில் உள்ள புகழ்பெற்ற அவா பாலம் நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்தது. இதுபோன்ற இருநாடுகளிலும் சாலைகள் சேதம் அடைந்துள்ளன.
இப்படி பல இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஆங்காங்கே மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலநடுக்கத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வறுமை நாடுகளில் ஒன்றாக மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. இதனால் பிரதமர் மோடி மியாமருக்கு உதவி செய்வதாக உறுதி அளித்திருந்தார். இந்த நிலையில், இந்தியா நிவாரண பொருட்களை அனுப்பி உள்ளது. சுமார் 15 டன் நிவாரணப் பொருட்களை மியான்மருக்கு இந்திய அனுப்பி உள்ளது. காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை நிலையத்திலிருந்து, கூடாரங்கள், போர்வைகள், உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அடிப்படை மருந்துகள், சூரிய மின் விளக்குகள், ஜெனரேட்டர் பெட்டிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் C130J விமானம் மியான்மருக்குப் புறப்பட்டது. நிவாரணப் பொருட்களில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், பாராசிட்டமால், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், கனுலா, சிரிஞ்ச்கள், கையுறைகள், சிறுநீர் பைகள் போன்றவை உள்ளன.