10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சாதனை படைத்த கோவை மாணவிக்கு பரிசு..!

கோவை :நாடார் பேரவை – கோவைநாடார்களின் சூலூர் டி. ஆர்.சி அணியின் சார்பில்பெருந்தலைவர் காமராஜர் 122 -வது பிறந்த நாள் விழா – அரசுதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ – மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா கோவையில் நடந்தது. 10-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் கோவை அவிலா கான்வென்ட் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி சஞ்சுஸ்ரீ 500க்கு 474 மார்க்குகள் பெற்றார்.இவருக்குநாடார் பேரவை மாநில பொதுச் செயலாளர் டி .ஆர் . சந்திரசேகரன் நற்சான்றிதழும்,ரூ 2 ஆயிரம்ரொக்க பரிசும் வழங்கி பாராட்டினார் மாணவியின் பெற்றோர்களும் பங்கேற்றனர்.