கோவை சரவணம்பட்டி துடியலூர் ரோட்டில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார் ஆகியோர் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை டி.நகரை சேர்ந்த சபீபுல்லா ( வயது 53) அரியானா மாநிலத்தை சேர்ந்த சங்கீதா ஷர்மா ( வயது 25) புது டெல்லியை சேர்ந்த சோனா (வயது 29) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பியூட்டி பார்லருக்கு சீல் வைக்கப்பட்டது.
கோவை பியூட்டி பார்லரில் விபச்சாரம் – டெல்லி அழகி உட்பட 3 பேர் கைது..!
