கோவையில் வீட்டில் வைத்து விபசாரம் – 3 பெண்கள் கைது..!

கோவைபுதூர்,  திருப்பதி நகரில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக குனியமுத்தூர் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த உமாபதி, ராஜேஸ்வரி, நாகலட்சுமி, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் . இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது..