கோவையில் வீடு வாடகைக்கு எடுத்து விபச்சாரம்… அழகிகள் உட்பட 6 பேர் கைது..!

கோவை பீளமேடு அருகே உள்ள சேரன் மாநகர், மலர் அவென்யு, 6 -வது வீதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு அழகிகளை வைத்து விபச்சாரம் செய்வதாக பீளமேடு போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் நிர்மலா தேவி நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இதை நடத்தி வந்த பீளமேடு ஹட்கோ காலனியை சேர்ந்த ஜான்பால் (வயது 34) மற்றும் கணபதி, வி.ஜி.ராவ் நகரை சேர்ந்த விஜயலட்சுமி (வயது 54) நாமக்கல் மாவட்டம், வெள்ளியம்பாளையத்தை சேர்ந்த அஸ்மா ( வயது 22) அரியலூர் மாவட்டம், எரியாவூரை சேர்ந்த வேம்பு (வயது32) திருப்பூர், முருகம்பாளையம் செல்வி (வயது 30) கோவை காளப்பட்டி ரோடு அபிபிதா (வயது 24) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..