வியாபாரியிடம் விபசார அழைப்பு – 5 தரகர்கள் கைது..!

சிவகங்கை மாவட்டம்,காரைக்குடி பக்கம் உள்ள கல்லுப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் ( வயது 33) தள்ளுவண்டி பெல்ட் வியாபாரி. இவர் நேற்று சிங்காநல்லூர்,ஹவுசிங் போர்டு காலனி, திருநகர் பகுதியில் நடந்து சென்றார். அப்போது இவரிடம் ஒரு கும்பல் தங்களிடம் விபசாரத்துக்கு அழகிகள் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறினார்கள். இது குறித்து முருகேசன் சிங்கநல்லூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபச்சார அழைப்பு விடுத்த பெங்களூர் சுரேஷ் ( வயது 42 )நெல்லை மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் செல்வகுமார் (வயது 34 )திருப்பூர் கே . செட்டிபாளையம் , முருகானந்தன் (வயது 30 )போத்தனூர், கிருஷ்ணா நகர் கலைராஜா (வயது 37) தேனி மாவட்டம் தாமரைக்குளம் சேதுராமன் ( வயது 31) ஆகியோரை கைது செய்தார்.இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..