விபச்சார அழைப்பு விடுத்தவர் கைது – கார் பறிமுதல்..!

கோவை போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி நேற்று வெள்ளலூர் எல்.ஜி. நகர் பகுதியில்ரோந்து சுற்றி வந்தார்.அப்போது அங்குள்ள பஸ் ஸ்டாப் அருகே பெண்களை காட்டி விபச்சார அழைப்பு விடுத்ததாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ,கிருஷ்ணா நகரை சேர்ந்த செந்தில்குமார் (வயது 47 )என்பவரைகைது செய்தார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரிடம் இருந்து ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.