கோவை மசாஜ் சென்டரில் விபசாரம் – பெண்கள் உட்பட 4 பேர் கைது..!

கோவை கணபதி சங்கனூர் ரோட்டில் ஆயுர்வேதிக்மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக சரவணம்பட்டி போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் சரவணன் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பெண்களை வைத்து மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கேரள மாநிலம் கோட்டையத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி ( வயது 32 )ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி கிருஷ்ணவேணி ( வயது 32) பீளமேடு ஜிவி ரெசிடென்சி ரஞ்சனா ( வயது 23) கோழிக்கோடு ஜோமல் ஜோனி ( வயது 33 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ராமச்சந்திரன் என்பவர் தலைமறைவாகி விட்டார்..