மசாஜ் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபசாரம்… கோவை மசாஜ் சென்ரலில் திடீர் சோதனை… 14 பேர் கைது..!

கோவை அருகே உள்ள சூலூர் கலங்கல் ரோட்டில் புதிய -பழைய பஸ் நிலையம் பகுதிகளில் உள்ள மசாஜ் சென்டர்களில் மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இந்த மசாஜ் சென்டர் நடத்தி வந்த வயநாடு பசில் (வயது 30) கோட்டையம் சைலா ஸ்ரீ (வயது 31) சிஜோஸ் ( வயது 33) சரவணம்பட்டி உதயகுமார் (வயது 26) உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 2 பெண்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். மசாஜ் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது..