சூலூரில் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருள் வழங்கல்.!!

முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டும் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் சூலூர் பிரைமரி ஹெல்த் சென்டர்ல் வழங்கப்பட்டது. முன்னதாக கலைஞர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் மரியாதை செய்யப்பட்டு ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு தாய்ப்பால் இன்றியமையாதது நோய் எதிர்ப்பு சக்திக்கு தாய்ப்பாலின் அவசியத்தையும் வருகை தந்த தாய்மார்களுக்கு எடுத்துக்கூறி தாய்ப்பால் சுரக்க சத்தான உணவுகளை உட்கொள்ள அறிவுறுத்தப்பட்டு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வேர்கடலை பேரிச்சம்பழம் போன்ற பொருட்களை பேரூராட்சி மன்ற தலைவர் தேவி மன்னவன் துணைத் தலைவர் கணேஷ்,சூலூர் நகர முன்னாள் செயலாளர் ஜெகநாதன், செவிலியர் நந்தினி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பசுமை நிழல் விஜயகுமார், விஜயலட்சுமி, தங்கமணி, முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் தர்மராஜ், திமுக கோபால், எஸ். பி .சிவகுமார், டாஸ்மார்க் சண்முகம், வசந்தகுமார், அஜிஷ் மற்றும் 50க்கும் மேற்பட்ட தாய்மார்கள் கலந்து கொண்டனர்.