திருச்சியில் தமுமுக 30வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொது மருத்துவ முகாம்..!

தமுமுக 29 வது வார்டு ஆழ்வார்தோப்பு கிளை சார்பில் திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம் வார்டு தலைவர் கபீர் அஹமது தலைமையில் நடைபெற்றது. முன்னதாக தமுமுக முப்பதாவது ஆண்டு விழாவை முன்னிட்டு மாநில பொருளாளர் சபியுல்லாகான் கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார் அனைவரையும் வார்டு செயலாளர் ஜாகிர் உசேன் வரவேற்றார் இம்முகாமை மாநில பொருளாளர் சபியுல்லாகான் துவக்கி வைத்தார் இம்முகாமில் மாவட்ட தலைவரும் மாமன்ற உறுப்பினருமான பைஸ் அகமது, மாநிலத் துணைச் செயலாளர் இப்ராஹிம் மருத்துவ சேவை அணி மண்டல செயலாளர் தல்ஹா பாபு தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராகிம்சா மாவட்ட பொருளாளர்
ஹுமாயூன் கபீர் அண்ணா நகர் பகுதி தலைவர் அப்துல் நாசர், அப்துல் ரசாக் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இம்மருத்துவ முகாமை
திருச்சி ஃப்ரண்ட் லைன் மருத்துவமனை டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன் தலைமையில் மருத்துவர்கள் பொது மக்களுக்கு இலவசமாக சிகிச்சையும் மருந்துகளையும் வழங்கினர் இதில் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாமில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மாத்திரை மருந்துகள் சிறப்பு டானிக் இலவசமாக வழங்கப்பட்டது.நிகழ்வின் முடிவில் 29வதுவார்டு மருத்துவ சேவை அணி அஸ்லாம் அகமது நன்றி கூறினார்.