ரயிலில் பெண்களிடம் அத்துமீறல் – வக்கீல் கைது..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மணி நகர் பகுதியில் சேர்ந்த அப்துல் ரசாக் ( வயது 47) வழக்கறிஞர்.  இவர் வழக்கு சம்பந்தமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு வரும் ” மெமு “. ரயிலில் பயணம் செய்து வந்தார். அப்போது ரயிலில் பயணம் செய்து வரும் பெண்களை நோட்டமிட்டு அவர்களை பின்தொடர்ந்து சென்று உரசி அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது குறித்து மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வழக்கறிஞர் அப்துல் ரசாக் ரயிலில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். கைதான அவர் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்..