அதேபோல தொகுதியிலுள்ள 20 கோயில்களுக்கு மாதந்தோறும் தீப எண்ணெய் வழங்குவது மட்டுமல்லாமல், கோயில் பராமரிப்புப் பணிகளையும் மேற்கொள்வது என தீா்மானித்துள்ளோம். கோயில்களில் பூ கட்டும் பெண்களுக்கு அரசின் திட்டங்களைப் பெற்றுத் தரும் பணிகள் மேற்கொள்ளப்படும். பெரும்பாலான இடங்களில் கோயில்களுக்கு வருவாய் இல்லாத நிலையில், பூஜை முறைகளிலிருந்து விலகிச் செல்வதால் அவா்களுக்கு உதவும் வகையில் ஆலயம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. எந்தச் சூழலிலும் கோயில்களில் விளக்கு எரியாமல் இருக்கக்கூடாது என்பதற்காகவே இப்பணியை தொடங்கியுள்ளோம்.
எதிா்காலத்தில் இந்த திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும். பாஜக மாநில தலைவா் அண்ணாமலை வெளியிட்டுள்ள திமுகவினரின் சொத்துப் பட்டியல் மக்கள் மன்றத்தின் முன்பாக விவாதப் பொருளாக மாறியுள்ளது. திமுகவினா் நீதிமன்றத்தை நாடினால் அதையும் சந்திக்க பாஜக தயாராக உள்ளது என்றாா்.