குளத்தில் ஆண் சடலம் மீட்பு..

கோவை குனியமுத்தூர் ஜே. ஜே. நகர் ,சர்ச் பின்புறம் உள்ள செங்குளத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து குனியமுத்தூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள. விசாரணையில் குளத்தில் பிணமாக மிதந்தவர் குனியமுத்தூர் பி. கே. புதூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் ( வயது 56) என்பது தெரிய வந்தது. இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவர் எப்படி செத்தார் ? என்று தெரியவில்லை . இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..