4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் – 20 ஆண்டு சிறை தண்டனை.!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி ,இ.பி. நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 78 ) ஓய்வு பெற்ற மின் வாரிய ஊழியர். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பாட்டி பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் . அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் முருகன் தான் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து முருகனை சிறையில் அடைத்தனர் ..இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது . வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி சிறுமியை பலாத்காரம் செய்த முருகனுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ 10 ஆயிரம் அபராதமும், அந்த தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு கடுகாவல் தண்டனை விதித்து நீதிபதி குலசேகரன் தீர்ப்பு வழங்கினார். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ 5. லட்சம் இழப்பீடு தொகையாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும், முருகன் கட்டும் அபராத தொகையான ரூ 10 ஆயிரத்தையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்..