கோவையில் 3 மாணவிகள் திடீர் மாயம் ….

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பெரம்பலூரை சேர்ந்தவர் ஆனந்தன் இவரது மகள் இசையரசி (வயது 19) கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பார்ம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்..கடந்த 6-ந் தேதி தனது ஊருக்கு செல்வதற்காக அவரது உறவினர் ஒருவர் அவரை ரயில் நிலையத்தில் கொண்டு போய் விட்டார். ஆனால் இசையரசி ஊருக்கு செல்லவில்லை எங்கோ மாயமாகிவிட்டார் .இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.இதே போல சிறுமுகையை சேர்ந்தவர் பூபதி. இவரது மகள்காவியா ஸ்ரீ (வயது 19 )தனியார் பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார். 8 -ந்தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து தாய் சசிகலா சிறுமுகை போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள். இதேபோல சிங்காநல்லூர் வரதராஜபுரம் மேடு பகுதியை சேர்ந்தவர் 17 வயதுஇளம் பெண். இவர்பிளஸ் 2 படித்து வருகிறார் ..கடந்த 9ஆம் தேதி இவர்தெலுங்கு பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றவர் திடீரென்று மாயமாகிவிட்டார் .இது குறித்து தந்தை செல்வபுரம் போலீசில் புகார் செய்துள்ளார்.. போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.