கியாஸ் லாரி மீது பைக் மோதி வாலிபர் சாவு. ..

கோவை அருகே உள்ள மதுக்கரை ஐயப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் உதயகுமார் .இவரது மகன் தினேஷ் (வயது 23) இவர் நேற்று கொச்சி- சேலம் பைபாஸ் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் அங்குள்ளதனியார் தொழில்நுட்பக் கல்லூரி அருகே சென்றபோது அந்த வழியாக சென்ற கியாஸ் லாரி மீது பைக் மோதியது. இதில் தினேஷ் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார் .இது குறித்து மதுக்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் வைரம் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்.