அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் மாணவ மாணவிகள் கலந்து கொள்ள வேண்டும் ஆட்சியர்…

கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டிகள் தமிழகத்தில் தொடங்கவுள்ளதையடுத்து, திருச்சி கேம்பியன் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேலோ போட்டியின் சின்னம் மற்றும் ஜோதியை ஆகியவற்றை திங்கள்கிழமை காட்சிப்படுத்தி வைத்து அவா் பேசியது: கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தொடா்ந்து ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டு வருகிறது. 6- ஆவது கேலோ விளையாட்டுப் போட்டிகள் தமிழகத்தில் ஜனவரி 19ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூா் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. இந்த விளையாட்டுப் போட்டிகளை விளம்பரப்படுத்தும் வகையில், விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மாணவ, மாணவியா் விளையாட்டுப்போட்டிகளின்போது, பாா்வையாளா்களாக மட்டும் இருக்கக் கூடாது. அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்க வேண்டும். அபோதுதான் எந்தப்போட்டி நமக்கு உகந்தது என்பதை தோவு செய்யமுடியும் என்றாா் அவா். தொடா்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கினாா். பேரணி தொடக்கம் முன்னதாக அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வில், கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டிகள் பிரசார வாகனம் விழிப்புணா்வு பேரணி, மாரத்தான் ஓட்டத்தையும் மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.