கோவை அருகே உள்ள பி.என். புதூர் நேதாஜி வீதியைச் சேர்ந்தவர் தங்கவேலு, இவரது மகள் நந்தினி குமாரி( வயது 36) இவருக்கும் அருண் சதீஷ்குமார் என்பவருக்கும் 7-7–2017 அன்று திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 30 பவுன் நகையும் ரூ 3 லட்சம் ரொக்கமும் வரதட்சணையாக கொடுத்தனர்..இந்த நிலையில் அருண் சதீஷ்குமார் பல பெண்களுடன் கள்ள தொடர்பு வைத்திருந்ததராம் இது அவரது மனைவிக்கு தெரிய வந்தது.இதை அவர் கண்டித்தார்.இதனால் ஆத்திரமடைந்த அருண் சதீஷ்குமார், அவரது தந்தை கர்ணன், தாயார் சாந்தி ஆகியோர் நந்தினி குமாரியை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக நந்தினி குமாரி மேற்கு பகுதி அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் கணவர் அருண் சதீஷ்குமார், மாமனார் கர்ணன் மாமியார் சாந்திஆகியோர் மீது வரதட்சனை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாகள்.
வரதட்சணை கேட்டு மனைவி சித்ரவதை. கணவன் -மாமனார்- மாமியார் மீது வழக்கு….
