டாஸ்மாக் பார் அருகே ஆண் பிணம் …

கோவை போத்தனூர் செட்டிபாளையம் சி.டி. பவுண்டேசன் பக்கம் உள்ள டாஸ்மாக் பார்அருகே நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 40 வயது இருக்கும்.அடையாளம் தெரியவில்லை. இதுகுறித்து செட்டிபாளையம் கிராம நிர்வாக அதிகாரி சுஜாதா செட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.