அறைக்குள் புகுந்து அரிவாளை காட்டி மிரட்டி கல்லூரி மாணவரிடம் கொள்ளை..!

கோவை:  கேரள மாநிலம் , மலப்புறம் களிஞ்சபாடியை சேர்ந்தவர் அஷ்ரப் பலவாளி .இவரது மகன் முஹம்மத் பைஸ் (வயது 21 )இவர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். ஜி. கே. எஸ். நகரில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் நண்பருடன் தங்கி உள்ளார் . நேற்று இவர் அறையில் தனியாக இருந்த போது அடையாளம் தெரியாத 4 பேர் அறைக்குள் புகுந்து அரிவாளை காட்டி மிரட்டி செல்போன் பணம் ரூ. 3 ஆயிரம், கைக்கடிகாரம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து முகமது பைஸ் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் ஜோதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.