கோவையில் மூதாட்டியிடம் நகை பறித்த கொள்ளையன் கேரளாவில் கைது..!

பீகார் மாநிலத்தை சேர்ந்தவன்கோலு குமார் ( வயது 19) இவன் கோவை குனிமுத்தூரில் பெற்றோர்களுடன் தங்கியிருந்து உள் அலங்கார வேலைகள் செய்து வந்தான்.இவன் கடந்த மாதம் 18ஆம் தேதி குனியமுத்தூரில் நடந்து சென்ற 71 வயது மூதாட்டியிடம் 3 பவுன் செயினை கொள்ளையடித்து விட்டு கேரளாவுக்கு தப்பி சென்று விட்டான். இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடி வந்தார்..அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்ததில் கொள்ளையன் கேரளாவுக்கு தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து கேரள போலீஸ் உதவியுடன் காசர் கோட்டில் வைத்து குனியமுத்தூர் போலீசார் கோலு குமாரை நேற்று கைது செய்தனர்.இவன் கோவைக்கு அழைத்து வரப்பட்டான். திருடிய நகையை விற்று அதில் கிடைத்த பணத்தை ஆன்லைன் சூதாட்டம் ஆடியதாக விசாரணையில் தெரிய வந்தது. இவனிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.