வாலிபரை ஓரின சேர்க்கைக்கு அழைத்து தங்க நகைகள் கொள்ளை.!!

கோவை கணபதி பக்கம் உள்ள நல்லாம்பாளையம், சீனிவாச நகரை சேர்ந்தவர் பால் ..இவரது மகன் ராஜேந்திரன் ( வயது 34) கோவையில் உள்ள நகைக்கடையில் வரவேற்பாளராக வேலை பார்த்து வருகிறார்.இவரின் வாட்ஸ் அப் மூலம் சம்பத் என்பவர் அறிமுகமானார். அவரை ஓரினசேர்க்கைக்கு அழைத்தார். அதை நம்பி ராஜேந்திரன் ரத்தினபுரி ரூட்ஸ் பாலம் கீழே சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 6 பேர் அவரை மிரட்டி அவரிடம் இருந்த 15 கிராம் எடை கொண்ட செயின், மோதிரம் ஆகிவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.இது குறித்து ராஜேந்திரன் ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரை தேடி வருகிறார்கள்.