கோவை மாநகர வடக்கு போலீஸ் துணை கமிஷனராக ரோகித்நாதன் ராஜகோபால் இன்று பொறுப்பேற்பு..!

கோவை மாநகர வடக்கு பகுதி போலீஸ் துணை கமிஷனராக பணிபுரிந்து வந்தவர் சந்தீஷ். இவர் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாறுதலாகி சென்று உள்ளார் .இவருக்கு பதிலாக வடக்கு பகுதி புதிய போலீஸ் துணை கமிஷனராக ரோகித் நாதன் ராஜகோபால் நியமிக்கப்பட்டார். இவர் இன்று காலையில் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன் சென்னை அண்ணாநகர் போலீஸ் துணை கமிஷனராக பணிபுரிந்தார். இவருக்கு உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், அமைச்சு பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இவர் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் வாழ்த்து பெற்றார்..