லாரன்ஸ் பிஷ்னோயை கொல்பவருக்கு ரூ.1 கோடி வெகுமதி.!!

சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோயை சுட்டுக் கொல்பவருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலைக்கு பொறுப்பேற்று சிறையில் அடைக்கப்பட்ட கும்பல் லாரன்ஸ் பிஷ்னோய்யை கொல்லும் காவல்துறை அதிகாரிக்கு வெகுமதி அளிப்பதாக க்ஷத்ரிய கர்னி சேனை அமைப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து க்ஷத்ரிய கர்னி சேனையின் தேசியத் தலைவர் ராஜ் ஷெகாவத், “லாரன்ஸ் பிஷ்னோய்யைக் கொல்லும் எந்த ஒரு காவல்துறை அதிகாரிக்கும் ரூ.1,11,11,111 வெகுமதியாக வழங்கப்ப்படும்” என்று தெரிவித்துள்ளார்.