பெண் போலீசிடமே ரூ.13 லட்சம் ஆன்லைன் மோசடி – 3 பேர் மீது வழக்குபதிவு.!!

கோவை மாநகர ஆயுதப்படையில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் சந்திரா. இவரிடம் 3 பேர் ஆன்லைன் வியாபாரம் செய்வதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை காட்டினார்கள். இதை நம்பிய சந்திரா அந்த 3 பேரிடம் ரூ.13 லட்சம் கொடுத்தார். அவர்கள் லாபம் எதுவும் கொடுக்காமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் மோசடி செய்து விட்டனர் . இது குறித்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சந்திரா குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார் . போலீசார் சுந்தரம், விஜயராகவன், ராஜ்குமார் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..