ரூ.15 லட்சம் தங்கம் மோசடி – தொழிலாளி மீது புகார்.!!

கோவை செட்டி வீதி அசோக் நகர், சாவித்திரி நகர் சேர்ந்தவர் பாலசிங்கம் (வயது 46)  பெரிய கடை வீதியில் நகை பட்டறை நடத்தி வருகிறார் . இவர் ராம்குமார் (வயது 26) என்பவரிடம் 802 கிராம் தங்கத்தை கொடுத்து நகை செய்யுமாறு கூறினார். அந்த தங்கத்தை நகை செய்து கொடுக்காமல் மோசடி செய்து விட்டு ராம்குமார் எங்கோ மாயமாகிவிட்டார். இதன் மதிப்பு ரூ 15 லட்சம் இருக்கும். இது குறித்து பாலசிங்கம் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராம் குமாரை தேடி வருகிறார்கள்.