போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.25 லட்சம் நில மோசடி – 3 பேர் மீது போலீசில் புகார்..!

கோவை சேரன் மாநகரை சேர்ந்தவர் கிருஷ்ணா தாசன். இவரது மனைவி ஹேமலதா (வயது 58) இவர் கோவை மத்திய பகுதி குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் செய்துள்ளார் . அதில் 3 பேர் பீடம்பள்ளியில் தனக்கு சொந்தமான ரூ 25 லட்சம் மதிப்புள்ள 8 சென்ட் நிலத்தை போலி தஸ்தாவேஜிகள் தயாரித்து மோசடி செய்து விட்டதாக கூறியுள்ளார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் அருண், சப் இன்ஸ்பெக்டர் பூமாலட்சுமி ஆகியோர் சிங்காநல்லூர் செல்லாண்டியம்மன் நகரை சேர்ந்த பிரகாஷ், இருகூர் ஈஸ்வரன் கோவில் வீதியைச் சேர்ந்த துரைசாமி, சிங்காநல்லூர் செல்லாண்டியம்மன் நகர் சரஸ்வதி ஆகியோர் மீது கூட்டு சதி ,மோசடி உட்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..