கோவை இன்ஜினியர் ஸ்கூட்டரில் இருந்த ரூ.3.25 லட்சம் திருட்டு.!!

கோவை பீளமேடு அண்ணா நகர் பக்கம் உள்ள கல்லூரி நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 44) சாப்ட்வேர் இன்ஜினியர். இவர் நேற்று ரேஸ் கோர்சில் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு தனது நண்பரை பார்க்கச் சென்றார். திரும்பி வந்து பார்த்த போது ஸ்கூட்டரில் வைத்தருந்த ரூ. 3 லட்சத்து 25 ஆயிரத்தை காணவில்லை. யாரோ திருடிவிட்டனர். இது குறித்து திருநாவுக்கரசு ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..