ரூ.30 லட்சம் சொத்து மோசடி : ஒருவர் கைது – கோவை பெண் டாக்டர் மீது வழக்குபதிவு..!

கோவை சரவணம்பட்டி விளாங்குறிச்சி, தச்சன் தோட்டத்தைச் சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி மருதாயி (வயது 61) இவர் மாநகர குற்ற பிரிவு போலீசில் ஒரு புகார் செய்துள்ளார். அதில் உப்பிலிபாளையத்தில் அவரது கணவர் ராஜூவுக்கு சொந்தமான 3. 21 சென்ட் நிலத்தை போலி தஸ்தாவேஜிகள் தயாரித்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் கொடுத்து 3 பேர் மோசடி செய்து விட்டதாக கூறியுள்ளார் . இது தொடர்பாக கணபதி ,நல்லாம்பாளையம்,சக்தி நகரை சேர்ந்த சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டார். துடியலூர் அப்பே கவுண்டர் வீதியை சேர்ந்த பரணிதரன்,டாக்டர் ராஜேஸ்வரி ஆகியோர் மீது மோசடி உட்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..