தாய்லாந்து நாட்டிலிருந்து இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.35 கோடி கொக்கைன் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்..!

சென்னை விமானநிலையத்தில் தாய்லாந்து நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.35 கோடி மதிப்பிலான கொக்கைன் போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு திங்கள்கிழமை வந்த விமானத்தில் சுற்றுலா விசாவில் வந்த இந்தோனேசியாவைச் சோ்ந்த சுமாா் 26 வயது இளைஞரை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பிடித்து சோதனை செய்தனா்.

அப்போது, அவா் வைத்திருந்த சூட்கேஸில் அதில் இருந்த ரகசிய அறையில் மூன்று பொட்டலங்களில் ரூ.35 கோடி மதிப்பிலான 3.3 கிலோ கொக்கையின் போதை பொருள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த இளைஞரை கைது செய்தனா்.

விசாரணையில், லாவோஸ் நாட்டிலிருந்து இந்த போதைப்பொருளை கடத்தி தாய்லாந்து வழியாக சென்னைக்கு கொண்டு வந்தது தெரியவந்தது.

மேலும், இவா் ஏற்கனவே பல முறை போதைப் பொருள் கடத்தி வந்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரிடம் அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.