சினிமா நடிகர் பார்த்திபனிடம் ரூ.42 லட்சம் மோசடி – ஊழியர் மீது புகார்..!

சென்னை நந்தனம் 7- வது வீதியை சேர்ந்தவர் பார்த்திபன்.சினிமா நடிகர் – டைரக்டர். இவர் தற்போது ” டீன்ஸ் ” என்று தமிழ் படத்தை இயக்கி வருகிறார். இவரது பட நிறுவனத்தில் கோவை பாப்பநாயக்கன்பாளையம், பாரதியார் ரோட்டை சேர்ந்த சிவ பிரசாத் என்பவர் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். இவர் தயாரிப்பாளர் பார்த்திபனிடம் : ” வி.எப்.எக்ஸ்.வேலையை கடந்த பிப்ரவரி மாதம் 10ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதிக்குள் முடித்து தருவதாக கூறி 68 லட்சத்து 54 ஆயிரத்துக்கு திட்டம் தயாரித்து கொடுத்திருந்தார். தயாரிப்பாளர் பார்த்திபன் அவரிடம் முதல் கட்டமாக ரூ 42 லட்சத்தை கொடுத்தார். பணத்தைப் பெற்றுக் கொண்ட சிவப்பிரசாத் .அந்த வேலையை செய்து முடிக்கவில்லை .பணத்தை திருப்பி கேட்ட போது பணத்தையும் கொடுக்கவில்லை. சிவபிரசாத் ரூ 42 லட்சத்தை மோசடி செய்து விட்டார். இது குறித்து சினிமா பட டைரக்டர் பார்த்திபன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார்,சூப்பர்வைசர் சிவபிரசாத் மீது மோசடி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்..