கோவை நகை வியாபாரியிடம் ரூ.51 லட்சம் வழிப்பறி – பைக் ஆசாமிகள் கைவரிசை..!

கோவை வைசியாள் வீதியைசேர்ந்தவர் விலாஸ் கடம்.இவரது மகன் அக்காய்கடம் (வயது 28) நகை வியாபாரி. இவர் சேலத்தில் தங்கம் வாங்குவதற்காக ரூ 50 லட்சத்து 95 ஆயிரத்தை ஒரு பையில் வைத்துக் கொண்டு தனது இரு சக்கர வாகனத்தில் அவிநாசி ரோடு மேம்பாலம் அருகே நேற்று காலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 பேர் இவர் வைத்திருந்த பணப் பையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர். இது குறித்து நகை வியாபாரி அக்காய் கடம் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ண பட்டேல் மற்றும் மற்றொரு ஒருவரையும் தேடி வருகிறார்கள்..