உயர்ரக போதைப் பொருள் விற்பனை – 2 வாலிபர்கள் கைது..!

கோவை கடைவீதி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் ஆகியோர் நேற்று தெற்கு உக்கடம், பேரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் “மெத்தோபட்டமைன் ” என்ற உயர் ரக போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் கரும்புக்கடை சாரமேடு பாத்திமா நகரை சேர்ந்த இஜாஸ் அகமத் ( வயது 24)குறிச்சி பிரிவு யாசர் அராபத் ( வயது 18) என்பது தெரியவந்தது. இவர்களிடமிருந்து போதை பொருள்,இருசக்கர வாகனம், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது..