போலி ஆவணங்கள் மூலம் வீட்டு மனையை பலருக்கு விற்பனை – குற்றவாளி கைது..!

ஆவடி மற்றும் பல்வேறு பகுதிகளில் ஒரு வீட்டு மனை யை போலி ஆவணங்கள் மூலம் பலருக்கு விற்பனை செய்த கேடிகளின் அட்டகாசம் அதிகரித்து உள்ளது .இது பற்றிய விபரம் வருமாறு ஆவடி போலீஸ் கமிஷனர் ஆபீசில் பொதுமக்களின் குறை கேட்கும் முகாமில் கமிஷனர் கி. சங்கரை சந்தித்த சென்னை கோடம்பாக்கம் பூபதி நகர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமியின் மனைவி ராஜலட்சுமி வயது 43 என்பவர் மோகன் என்பவரிடம் கிருஷ்ணமூர்த்தி என்பவர் கிரயம் பெற்ற ஆவடி தாலுக்கா பொத்தூர் கிராமத்தில் ஜெயலட்சுமி நகரில் 2400 சதுர அடி வீட்டு மனையை முரளி என்பவருக்கு இரண்டாவது முறையாக கிரையம் செய்து கொடுத்துள்ளதாகவும் மேற்படி முரளி என்பவர் அதே வீட்டு மனையை கோபிநாத் என்பவனுக்கு பொது அதிகாரம் கொடுத்துள்ளான். சொத்தின் முந்தைய உரிமையாளருக்கு இரண்டாவது முறையாக கிரையம் செய்தது தெரிந்தது முந்தைய உரிமையாளர் மோகன் எதிரிக்கு உரிய பணத்தை பைசல் செய்து சொத்திற்குரிய அனைத்து ஆவணங்களையும் திரும்பப் பெற்றுள்ளார் எதிரி மீது நம்பிக்கை காரணமாக சார்பதிவாளர் அலுவலகத்தில் ரத்து செய்யாமல் விட்டுள்ளார். இது தெரிந்த குற்றவாளி கோபிநாத் மற்ற குற்றவாளிகளுடன் தலை மறைவாகி விட்டார். மேலும் சொத்தின் உண்மையான ஆவணங்கள் காணாமல் போய்விட்டதாக தெரிவித்து ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உரிய ஆவணம் பெற்று அதன் அடிப்படையில் தல மறைவு குற்றவாளிகள் இரண்டு பேருக்கும் ரெடில்ஸ் சார்பதிவாளர் அலுவலக கிரைய ஆவணத்தில் கொடுத்த புகாரில் கோபிநாத் பிரபு சரவணன் கிரையம் செய்து கொடுத்துள்ளார் குற்றவாளிகள் அனைவரும் சேர்ந்து போலியான ஆவணங்கள் மூலம் ராஜலட்சுமி ஆகிய எனக்கு சொந்தமான வீட்டு மனையை அபகரித்துள்ளனர் .இது குறித்து போலீஸ் கமிஷனர் சங்கர் கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய குற்ற பிரிவு நில பிரச்சனை தீர்வு பிரிவு போலீசார் துணை ஆணையர் பெருமாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில் குற்றவாளி கோபிநாத் வயது 41 தகப்பனார் பெயர் முத்து விநாயகம் என் ன்பவனை கைது செய்து பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டு  புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்..