கோவை ரேஸ் கோர்சில் சந்தன மரம் வெட்டி கடத்தல்..!

கோவை ரேஸ்கோர்ஸ், திருஞான சம்பந்தம் ரோட்டில் உள்ள ஒரு வீட்டின் முன் சந்தன மரம் வளர்ந்திருந்தது. அந்த மரத்தை இரவில் யாரோ 3 அடி நீளத்துக்கு வெட்டி கடத்திச் சென்று விட்டனர் . இது குறித்து அனுப்பர் பாளையம் கிராம நிர்வாக அதிகாரி (பொறுப்பு) ராஜா ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..