பெண் குரலில் பேசி “பிளஸ் 2 ” மாணவிக்கு காதல் டார்ச்சர்- கல்லூரி மாணவர் கைது.!!

கோவை குனியமுத்தூர் பகுதியில் வசிக்கும் தொழிலதிபரின் 17 வயது மகள் பிளஸ் 2 படித்து வருகிறார்..சிறுமியான இந்த பள்ளி மாணவி செல்போனில் ” ஸ்னாப் ஷாட்”உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் ஒரு பெண்ணின் பெயரில் அவருக்கு நட்பு அழைப்பு வந்தது. அந்த பள்ளி மாணவியும் அந்த பெண்ணுடன் சமூக வலைதளத்தில் நட்பு ஏற்படுத்திக் கொண்டார் .அவர் பெண் தான் என நினைத்து அந்த மாணவி அவருடன் சமூக வலைதளம் மூலம் பழகி வந்தார். மேலும் அந்த நபர் பெண்ணின் குரலில் பேசி பழகியதால் பள்ளி மாணவிக்கு சந்தேகம் எதுவும் ஏற்படவில்லை.இதற்கிடையே அந்தப் பள்ளி மாணவியுடன் பழகி வந்தவர் தான் பெண் இல்லை என்றும் தனது பெயர் ஜூனைத் ( வயது 22) என்றும் ஒரு கல்லூரியில் படித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் உன்னை காதலிப்பதாகவும், அவர் தெரிவித்ததால் பள்ளி மாணவி அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அந்த மனைவி அந்த நபருடன் பேசுவதை தவிர்த்து வந்தார். இருப்பினும் கல்லூரி மாணவர் ஜூனைத் அந்த பள்ளிக்கூட மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மாணவி பள்ளி செல்லும் வழி உட்பட பல்வேறு இடங்களில் நின்று கொண்டு மாணவிக்கு காதல் தொல்லை அளித்தும் , தொந்தரவு கொடுத்துள்ளார். நேற்று முன் தினம் ஜூ னைத் அந்த பள்ளி மாணவியின் வீட்டில் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது வீட்டை விட்டு வெளியே வந்த பள்ளியின் மாணவியின் தந்தை வாலிபர் ஒருவர் நீண்ட நேரம் வீட்டின் முன் நிற்பதை கண்டு அவரிடம் விசாரிக்க அருகே சென்றார். அவரை கண்டதும் ஜுனைத் அங்கிருந்து தப்பி ஓடினார். அப்போது ஜூனைத் செல்போனை கீழே விழுந்தது .அந்த செல்போனை எடுத்து பார்த்த போது மாணவியின் தந்தை அதிர்ச்சி அடைந்தார். அதில் சிறுமியின் புகைப்படம் இருந்தது.இது குறித்து ஜூனைத் தந்தை யிடம் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜூனைத் மாணவியின்தந்தைக்கு மிரட்டல் விடுத்தார். இது குறித்து மாணவியின் தந்தை குனியமுத்தூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார் . இதன் பேரில் போலீசார் அந்த கல்லூரி மாணவரை கைது செய்தனர். அவர் மீது கொலை மிரட்டல் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..