பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை..

கோவை சுந்தராபுரம், மச்சம் பாளையம் ,செங்கப்ப கோனார் வீதியை விதியை சேர்ந்தவர் குமார் . ஆட்டோ டிரைவர். இவரது மகன் தர்ஷன் (வயது 14 ) கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 9-வது வகுப்பு படித்து வந்தார் . இவர் நேற்று விநாயக சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். பின்னர் வீட்டிற்கு வந்த பிறகு யாரும் இல்லாத நேரம் நைலான் கயிற்றை விட்டத்தில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை இது குறித்து தந்தை குமார், சுந்தராபுரம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..